Monday, February 1, 2010

மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் 29.01.2010

ஈழத்தமிழர் மீதான இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி கடந்த ஆண்டு 29 ஆம் நாள் சென்னையில் தீக்குளித்து உயிர் துறந்த மாவீரன் முத்துக்குமார் மற்றும் அவரைப் பின்தொடர்ந்து தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீக்குளித்து மாண்ட 18 தோழர்கள் அனைவருக்கும் பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி பகுதி முழுவதும் எழுச்சியோடு நடத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு கா.க.புதூரில் ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத் தலைமையிலும், காலை 10 மணிக்கு ஆனைமலையில் நகர செயலாளர் வே.அரிதாசு தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சூளேசுவரன்பட்டியில் கண்ணன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி நகர செயலாளர் வே.வெள்ளிங்கிரி தலைமையிலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சிகளில் ம.தி.மு.க நகர செயலாளர் குகன்மில் செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் சுப்பையன், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் சக்தி, தமிழ் இளைஞர் பொதுநல மன்றத்தின் இராசுக்குமார், ஆதித்தமிழர் பேரவையின் மணிமாறன், நேதாஜி இளைஞர் மன்றத்தின் வெள்ளைநடராஜ், தி.மு.க கண்ணப்பன், தமிழ்நாடு மாணவர் கழகம், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட செயலாளர் கா.சு.நாகராசன் நன்றி கூறினார்.

நிகழ்வில் கழக தோழர்கள் சி.விசயராகவன், இரா.மோகன், த.இராசேந்திரன், கலை இராசேந்திரன், "யாழ்" மணி, "ஆர்மி" சக்தி, சுரேசுக்குமார், தவசி, சிவக்குமார், சீனிவாசன், ஆனைமலை அரிதாசு, கதிர், மணிமொழி, கணேசு, அப்பாத்துரை, பேச்சிமுத்து, கா.க.புதூர் உதயகிரி, மாரிமுத்து, த.மணி, மு.மணி, மாணவர்கள் கணேசுக்குமார், பிரபாகரன், பிரபுராம், பிரபு, முகம்மது,சபரி,வெற்றி,ரேணுகா,கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

read more...

Thursday, January 28, 2010

Muthukumar Photo

read more...

மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல்

ஓ.. வீரனே,
எங்கள் மண்ணில்
உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ,
மடியவில்லையடா
உன் கதை
முடியவில்லையடா!
-காசி ஆனந்தன்

2010 சனவரி 29 வெள்ளி,
கா.க.புதூர்,ஆனைமலை,பொள்ளாச்சி.

read more...

E.T

eXTReMe Tracker

P.R